Kathai Kathaiyaam

Tuesday, January 10, 2006

சங்கம் என்னும் ஓர் கட்டுக்கதை
சங்க இலக்கியம் என்று கூறப்படும், கி.மு. 200-க்கும் கி.பி. 200-க்கும் இடையே தொகுக்கப்பட்ட தொல்காப்பியமும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மிகவும் அருமையான இலக்கியம்தான். ஆனால் இவைகளை படிக்கும் பொழுது ஒரு கருத்து என் கண்ணை உருத்திற்று - இந்த நூல்கள் எதிலுமே "சங்கம்" என்ற சொல் இடம் பெறவே இல்லையே, அது ஏன்? உண்மையாகவே இவை ஒரு அரசனால் கூட்டப்பட்ட கழகத்தில் தொடுக்கப்பட்டிருந்தால், பாடலுக்குப்பாடல் "இன்னார் இயற்றிய பா" என்று எழுதிய தொகுப்பாளர், தொகுப்புக்கு ஒரு முறை "இந்த மன்னன் கூட்டிய கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டன" என்று எழுத மாட்டாரா?

"சங்கம்" என்ற சொல் சங்க கால இலக்கியத்திலேயே இல்லை என்றால், அது எங்கிருந்து வந்தது? சொல்லையும் பொருளையும் பார்த்தால் வடமொழிச்சொல் போல உள்ளது. கி.பி. 900-வாக்கில் இன்னூல்களுக்கு உறை எழுத முற்பட்ட சிலர் இந்த புறளியை கிளப்பி உள்ளனர். இவற்றில் முதற்குற்றவாளி "இறையனார் அகப்பொருள் அந்தாதி" என்னும் ஒரு உறை நூல். இந்த நூலில் தான் "சங்கம்", "குமரிக்கண்டம்", "கடல்கோள்", "பற்றுளி ஆறு" என்ற பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டுள்ளன. இவையே காலப்போக்கில் பெருகி, தமிழ் மக்களிடையே ஊறிப்போய்விட்டன.

6 மறுமொழிகள்:

  • Blogger Ravages/CC, 11:20 PMக்கு சொன்னது.

    Dude! Rockin. How do I write comments in Tamil.
    Ottha, kallakkal post.

     

  • Blogger Kingsley Joseph, 11:25 PMக்கு சொன்னது.

    மிக்க நன்றி. BhashaIndia.com என்ற இணைய தளத்தில் இருந்து தேவையான மென்போருளை இறக்கி இயக்கினால் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் விருப்பம் போல் தாவலாம்.

     

  • Blogger Ravages/CC, 11:46 PMக்கு சொன்னது.

    "இறக்கி இயக்கினால்"

    LOL! Download just got better

     

  • Blogger Alex, 9:56 PMக்கு சொன்னது.

    My guess is that "sangam" was an afterthought just for classification.
    I just can't beleive that you actually remember the "Purananooru" and occurences of these words!!

     

  • Anonymous Anonymous, 1:30 PMக்கு சொன்னது.

    நண்பரே
    உமது கருத்துக்கு விளக்கம் பெற திண்ணையில் குமரிமைந்தன் கட்டுரைகளை படிக்கவும்.
    குறிப்பாக பழைய பாண்டம் புதிய பண்டம் கட்டுரை.
    மேலும் விவரம் பெற
    www.thinnai.com
    htpp://kumarimainthan.blogspot.com

     

  • Anonymous Anonymous, 7:29 PMக்கு சொன்னது.

    I would live the complete version of the title of your blog. I remember hearing it as a child but no one I know currently remembers the complete version. Can you help me?
    After - kaaranathil thoranamaam what follows?
    Thanks - it would be great if you can supply the words for the entire nursery rhyme

     

Post a Comment

<< முதற்ப்பக்கம்